புதுடெல்லி, ஜன.1-
எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கிங் பிஷர் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய இரு தனியார் நிறுவனங்கள், உள்நாட்டு விமான கட்டணத்தை இன்று முதல் உயர்த்தி உள்ளன. மத்திய அரசின் எண்ணை நிறுவனங்கள், விமான பெட்ரோல் விலையை இன்று நள்ளிரவு முதல் ஏறத்தாழ 2 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்தது.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இது 6-வது விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இரு விமான நிறுவனங்களும், உள்நாட்டு போக்குவரத்து விமானங்களுக்கான கட்டணத்தை ரூ.200 வரை உயர்த்தி உள்ளன.
750 கிலோ மீட்டர் தூரம் வரை 100 ரூபாயும், 750 கி.மீட்டர் தூரத்துக்கு அதிகம் உள்ள இடங்களுக்கு ரூ.200-ம் உயர்த்தப்பட்டு உள்ளது. புத்தாண்டு தினமான இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இது 6-வது விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இரு விமான நிறுவனங்களும், உள்நாட்டு போக்குவரத்து விமானங்களுக்கான கட்டணத்தை ரூ.200 வரை உயர்த்தி உள்ளன.
750 கிலோ மீட்டர் தூரம் வரை 100 ரூபாயும், 750 கி.மீட்டர் தூரத்துக்கு அதிகம் உள்ள இடங்களுக்கு ரூ.200-ம் உயர்த்தப்பட்டு உள்ளது. புத்தாண்டு தினமான இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

No comments:
Post a Comment