முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 8, 2011

தென் மாவட்டங்களில் மது விற்பனை: ஒரே ஆண்டில் ரூ. 588 கோடி அதிகம்

மதுரை: மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் டாஸ் மாக்கடைகளில், மது விற் பனை 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு ரூ. 588 கோடி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மது விற்பனை டாஸ்மாக் கடைகள் மூலம் நடக்கிறது. மாதந்தோறும் புதிய மது வகைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

மது அருந்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட 9 தென் மாவட்டங்களில் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ரூ. 588 கோடி விற்பனை அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களில் 2009ல்  ரூ. 3ஆயிரத்து 16 கோடியே 87 லட்சத்திற்கு மது விற்பனையாகியுள்ளது. 2010ல் ரூ. 3ஆயிரத்து 605 கோடியே 45 லட்சத்திற்கு மது விற்கப்பட்டுள்ளது. சுமார் 20 சதவீதம் வரை கூடுதல் தொகைக்கு விற்கப்பட்டது டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Visitors