கராச்சி, ஜன 3-
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது.
இந்தப் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் சோயிப்மாலிக், கமரன் அக்மல் ஆகியோர் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
சூதாட்ட புகார் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் வங்கி கணக்கை கேட்டு இருந்தது. இதுவரை இருவரும் வங்கி கணக்கை கொடுக்க தவறிவிட்டனர்.
இதனால் இருவரும் உலக கோப்பையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் காரணமாக சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகிய 3 வீரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment