மெக்சிகோ சிட்டி: அமெரிக்க எல்லையை ஒட்டியுள்ள மெக்சிகோவின் நியோவோ லாரிடா சிறையில் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் இங்கு கைதிகளை கணக்கெடுத்த போது பலரை காணவில்லை. மொத்தம் 141 பேரை காணவில்லை என ஜெயில் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜெயிலுக்குள் வாகனங்கள் வரும் கதவு வழியாக சிறைக் கைதிகள் தப்பிச் சென்றது தெரியவந்துள் ளது. சிறை ஊழியர் ஒருவர் உதவியுடன், கைதிகள் தப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. போதைக் கடத்தல் கும்பல் அதிகம் உள்ள மெக்சிகோவில் சிறை கைதிகள் அதிகளவில் தப்பியுள்ளனர். இந்த சிறையில் கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவம் பலமுறை நடந்துள்ளது.
No comments:
Post a Comment