புதுதில்லி, டிச.16: பசுமைத் தொழில்நுட்ப ஒப்பந்தம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்களில் இந்தியாவும், சீனாவும் இன்று கையெழுத்திட்டன.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீன பிரதமர் வென் ஜியாபோ இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த உடன்பாடுகளில் கையெழுத்திடப்பட்டன.பசுமைத் தொழில்நுட்ப ஒப்பந்தம் தவிர, பொதுவான ஆறுகள் குறித்த தகவல் பரிமாற்றம், ஊடகப் பரிமாற்றம், பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றில் தலா ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.2 ஒப்பந்தங்கள் வங்கி தொடர்பானவை. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சீன வங்கி ஒழுங்குமுறை ஆணையம் இடையே ஒரு ஒப்பந்தமும், இந்திய எக்ஸிம் வங்கி(ஏற்றுமதி- இறக்குமதி வங்கி) மற்றும் சீன மேம்பாட்டு வங்கி இடையே ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகின.
No comments:
Post a Comment