ராஞ்சி, டிச.14: கள்ள நோட்டுகளைத் தடுக்கும்பொருட்டு பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சுப்பாராவ் தெரிவித்தார்.
போலி ரூபாய் நோட்டுகளை தடுக்கவும், நீண்டகாலம் நீடித்திருக்கவும் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என ராஞ்சி பல்கலைக்கழக மாணவர்களிடம் சுப்பாராவ் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் நோட்டுகளை பயன்படுத்திவரும் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகளிடம் இதுகுறித்த அனுபவங்களை கேட்க உள்ளதாக சுப்பாராவ் கூறினார்.
No comments:
Post a Comment