முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 6, 2010

தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் பேட்டி

தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் பேட்டி


இன்று காலை சைதாபேட்டையில் நடைபெற்ற டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு கண்டன கூட்டத்திற்கு வருகைதந்த தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கயில்.......
பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் செப்டம்பர் 3 ல் பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பாக வழங்கிய அநீதியான தீர்ப்பை எதிர்த்தும் இன்று தமுமுக சார்பில் தமிழகம் முழுவதும் 42 இடங்களில் தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
1949 ல் பாபர் மஸ்ஜிதிக்குள் சிலை வைக்கப்பட்ட போதும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது,

1986 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி பாபர் மஸ்ஜித் கதவுகள் உடைக்கப்பட்ட போதும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது ,

1992 பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்ட போதும் மத்தியில்
காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது
லிப்ரான் கமிஷன் பாபர் மஸ்ஜித் இடித்த குற்றவாளிகளான அத்வானி ,வாஜ்பாய் ,உமா பாரதி, போன்றவர்களை சுட்டிக்காட்டிய போதும் மத்திய அரசு சட்டத்தின் முன் நிறுத்த தயங்குகிறது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேல் முறையீடு செய்ய உள்ளோம் மேலும் அத்தீர்ப்பை உச்ச நீதிமன்றம் குப்பை தொட்டியில் எரியும் என்று எதிர்பார்க்கிறோம் என தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் கூறினார்

No comments:

Visitors