தமிழகத்தில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
மழை காரணமாக வீடுகள் இடிதல், வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்படுதல் போன்ற காரணங்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய கடந்த அதில், 76 பேர் ஆண்கள், 47 பேர் பெண்கள், 40 குழந்தைகள் ஆவர். ஆயிரத்து 233 கால்நடைகள் இறந்துள்ளன. 23 ஆயிரத்து 812 குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. அதில், 3 ஆயிரத்து 796 முழுமையாகவும், 20 ஆயிரத்து 16 குடிசைகள் பாதி அளவும் சேதம் அடைந்துள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment