முத்துப்பேட்டை செம்படவான்காடு ரயில்வே கேட் அருகே மளிகை கடை வைத்துள்ளவர் அலாவுதீன்(45). இவர் நேற்றிரவு கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை இவரது கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பக்கத்தில் இருந்த பொன்முடி(30) என்பவரின் சைக்கிள் கடைக்கு பரவியது. தகவல் அறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் 2 கடைகளிலும் இருந்த 2பிரிட்ஜ், மளிகை பொருட்கள், 15சைக்கிள்கள் சாம்பலானது. இதன்மதிப்பு ரூ.1லட்சம். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முத்துபேட்டைORG நியூஸ்காக தீன்




No comments:
Post a Comment