பெங்களூர் நகரில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. பகலில் நாள் முழுவதும் மேக கூட்டமாகவே காணப்படுகிறது. வெயிலை பார்ப்பது அறிதாகிவிட்டது. கடுங்குளிரால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பல பகுதிகளில் இதே நிலை நீடிக்கிறது. சித்ரதுர்காவில் 13.4, கதக்கில் 15.3 டிகிரி செல்சியஸ் என்று வெப்ப நிலை குறைந்துள்ளது. பொதுவாக டிசம்பரில் 16 டிகிரி செல்சியஸ் இருக்கும். இந்த ஆண்டு இதைவிட குறைவாக உள்ளது.
டெல்லியிலும் தற்போது மிகவும் குளிர் அதிகமாக உள்ளது. நேற்று 23.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியா ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பனி மூட்டம் காரணமாக விமானங்கள் தரை இறங்குவதிலும் தாமம் ஏற்பட்டது.
News uptate : மாலைமலர்

No comments:
Post a Comment