முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 17, 2010

வடகொரியா குண்டு வீசிய இடத்தில் தென்கொரிய ராணுவம் பயிற்சி

சியோல், டிச. 16: வடகொரியா சமீபத்தில் குண்டு வீசி தாக்குதல் நடத்திய இயான்பினாங் தீவில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடத்த தென்கொரிய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
தென்கொரியாவுக்குச் சொந்தமான இத் தீவு, வடகொரியாவுக்கு மிக அருகில் உள்ளது. இந்தத் தீவின் மீது கடந்த நவம்பர் 23-ம் தேதி வடகொரிய ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியன் மூலம்தான் இருநாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டது.
வடகொரியாவின் தாக்குதலால் இருவர் உயிரிழந்தனர். ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
இப்போது பதற்றம் சிறிது தணிந்துள்ள நிலையில் இயான்பினாங் தீவில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடத்த தென்கொரியா திட்டமிட்டுள்ளது. இந்தப் பயிற்சி டிசம்பர் 18 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Visitors